.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Wednesday 7 September 2016

தெரிந்துகொள்ளவோம்

தெரிந்துகொள்ளவோம் 👍

🔹ஈ தனது உணவை உண்ட பின், அதை வெளியே துப்பி விட்டு மீண்டும் உண்ணும்.

🔹ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.

🔹அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் மாலையிலேயே நடக்கின்றனவாம்.

🔹சிவப்புநிற தலைமுடியை உடைய வெளிநாட்டவர்களுக்கு சராசரியாக 90000 முடிகள் இருக்குமாம். அதே வேளையில் நம்மைப் போன்ற கருப்புநிற தலைமுடியை உடையவர் களுக்கு 110000 முடிகள் இருக்குமாம்.

🔹கடலில் வாழும் சில ஆக்டோபஸ் வகைகள் சிலநேரங்களில் பசிக்கொடுமை காரணமாக தங்கள் கைகளையே பிய்த்து தின்று விடுமாம்.

🔹பாலைவனத்தில் மிகக்குறைந்த ஒலியைக் கூடக் கேட்க முடியும்.

🔹ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.

🔹நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால்
கொஞ்ச நாளையில் புது கண் உருவாகிடும்.

🔹ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

🔹கம்போடியா நாட்டில் ஓடும் டொன்லெ சாப் என்கிற நதியானது வருடத்தில் 6 மாதம் வடக்கு நோக்கியும் மீதி 6 மாதம் தெற்கு நோக்கியும் ஓடுகிறது

No comments:

Post a Comment